search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி விவகாரம்"

    • டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்றார்.

    தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க இருந்தனர்.

    இந்நிலையில், காவிரி விகாரம் தொடர்பாக இன்று மாலை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-

    காவிரி விவகாரம் தொடர்பாக இன்று மாலை சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, நாளை காலை 9 மணியளவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு நடைபெறும்.

    காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் கூறுவதை கூட கர்நாடக ஏற்க மறுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற புதன்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை உரிய வாதங்களுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    பெங்களூரு:

    காவிரி டெல்டா பாசனத்துக்காக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம், 38 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.

    இதற்கு கர்நாடக அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்த நிலையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் கர்நாடக மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றியும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதற்காக கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். அவரிடம் தமிழக அரசின் மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி கர்நாடக அணைகளின் நிலவரம் உள்ளிட்டவை குறித்து நாளை(திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இதனிடையே காவிரி நீர் பிரச்சினை, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல்-மந்திரி சித்தராமையா முடிவு செய்துள்ளார்.

    இந்த கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறும் என்று துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று அறிவித்தார். கூட்டத்தில் மூத்த எம்.பி.க்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    • காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருந்தார்.
    • தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சித்தராமையாவுக்கு கடிதம்.

    காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது.

    அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. எனினும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இருந்த போதிலும், கர்நாடகா தரப்பில் தண்ணீர் திறந்து விடுவதில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

     

    முன்னதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதன் காரணமாக காவிரியில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றி, அம்மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பசவராஜ் பொம்மை அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

    அதில், "கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க வேண்டாம். கர்நாடக அணைகளில் உள்ள நீர், பெங்களூரு மற்றும் காவிரி விவசாயிகளுக்கே போதுமானதாக இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால், கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்கிறது.
    • காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டும்.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல், தமிழ்நாடு, குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகள், தென்மேற்கு பருவமழையின் போது மிகக் குறைவான மழைப்பொழிவைப் பெறுகிறது. குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை, குறிப்பாக கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளது.

    மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்த உத்தரவை கர்நாடகம் முழுமையாக மதிக்கவில்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை.

    2023-2024-ம் ஆண்டில், 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில், 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ளது. என்ற போதிலும், கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவிற்கு பற்றாக்குறையாக தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட்டுள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில், 2023, ஆகஸ்ட் 2-ம் நாளன்று நிலவரப்படி, 26.6 டி.எம்.சி. அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. இது குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். குறுவை நெற்பயிர் முதிர்ச்சியடைந்து, அதிக மகசூல் பெற, இன்னும், 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.

    இத்தகைய ஆபத்தான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சரிடம் கடந்த ஜூலை 5 மற்றும் 19 தேதிகளில் இப்பிரச்சனையை எடுத்துச் சென்று, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த விநியோக அட்டவணையைக் கடைப்பிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறும், இதனை முறையாக கண்காணிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தினை அறிவுறுத்துமாறும் வலியுறுத்தினோம்.

    இருப்பினும், கர்நாடக அரசு இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், முழுமையாக நிரம்பிய கபினி அணையில் இருந்து மட்டுமே தண்ணீரைத் திறந்து விட்டது. கர்நாடகாவின் முக்கிய நீர்த்தேக்கங்கள் 80 விழுக்காடு அளவிற்கு நிரம்பியுள்ள சூழ்நிலையிலும், அவற்றிற்குத் தொடர்ந்து நல்ல நீர்வரத்து உள்ள சூழ்நிலையிலும், அந்த நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை.

    தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா, மாநிலத்தின் நெல் தேவையைப் பெருமளவு பூர்த்தி செய்கிறது. ஏற்கெனவே அரிசித்தட்டுப்பாட்டால், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ள தற்போதைய சூழலில், காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெல் பயிரையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டுக் காப்பாற்ற வேண்டும்.

    அதோடு, உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு பிரதமர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இதனை உறுதி செய்வதற்குத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    ஜூன் மாதத்தில் கர்நாடகா கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளதால், அதுபோக ஜூலை மாதத்துக்கான மீதியை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் உசேன் கூறியுள்ளார். #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மசூத் உசைன் கூறியதாவது:-

    நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி. ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 3 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் ஜூலை 5ம் தேதி நடைபெறும்.

    அதுபோக, ஜூலை மாத பங்கீட்டை கர்நாடகா திறந்து விட வேண்டும்.  காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மதிக்க வேண்டும்.

    என அவர் கூறினார். தமிழக உறுப்பினர் சுப்பிரமணியன் கூறுகையில், “காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கர்நாடக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம் செயல்படுத்தவில்லை என்றால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பின்னர் பார்க்கப்படும். கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்க்கும் எந்த கருத்தையும் கூட்டத்தில் முன் வைக்கவில்லை” என தெரிவித்தார்.
    டெல்லியில் இன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்துக்கு ஜூலை மாத பங்காக 31 டிஎம்சி தண்னீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளின் படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். டெல்டா சாகுபடி விவரம், குடிநீர் தேவை என அனைத்து அம்சங்களும் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

     

    கூட்டம் முடிந்த பின்னர், தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி ஆணைய கூட்டத்தின் முடிவை வரவேற்றார். மேலும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரி நீர் கிடைத்தே தீரும் என கூறினார்.

    ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் மாதத்துக்கு 45.9 டிஎம்சி, செப்டம்பர் மாதத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ம் தேதி ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. #CauveryManagementAuthority
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. மத்திய அரசும் ஆணைய தலைவர் மற்றும் பிரதிநிதிகளை நியமித்தது.

    இதற்கான உறுப்பினர்களை நியமிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என முட்டுக்கட்டை போட்டஅம்மாநில முதல்வர் குமாரசாமி, இன்று ஆணையத்தின் கர்நாடக உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் ராஜேஷ்சிங்கை நியமித்து அறிவித்தார்.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி ஆணையத்தின் தலைவர் மசூது உசைன் தலைமையில் நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நான்கு மாநிலங்களுக்கும் இதற்கான அழைப்பிதல் அனுப்பப்படும் என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டும் அதற்கான உறுப்பினரை கர்நாடகா நியமிக்காதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதல்வர் குமாரசாமி வெளியிட்டுள்ளார். #CauveryIssue
    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. மத்திய அரசும் ஆணைய தலைவர் மற்றும் பிரதிநிதிகளை நியமித்தது.

    ஆனால், இதற்கான உறுப்பினர்களை நியமிக்காமல் கர்நாடக அரசு இழுத்தடித்து வந்தது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம் என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வந்தார். இந்நிலையில், ஆணையத்தின் கர்நாடக உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் ராஜேஷ்சிங்கை நியமித்து முதல்வர் அறிவித்துள்ளார்.

    மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் உறுப்பினராக பிரசன்னாவை நியமித்துள்ளார். ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக விவாதிக்க 3 நாட்களில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், இந்த கூட்டத்தில் கர்நாடக மாநில எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள் என்றும் குமாரசாமி இன்று தெரிவித்துள்ளார். 
    காவிரி மேலாண்மை ஆணையத்தை அரசிதழில் வெளியிட்டதற்கு மத்திய மந்திரி நிதின் கட்கரியை அதிமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். #ADMK #BJP #Cauvery
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த மத்திய அரசு சமீபத்தில் அதனை அரசிதழில் வெளியிட்டது. இதற்காக, மத்திய சாலை போக்குவரத்து, நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை இன்று சந்தித்த அதிமுக எம்.பிக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி.க்கள் நவநீத கிருஷ்ணன், முத்துக்கருப்பன் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். 
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசினார். #MKStalin #KamalHaasan
    சென்னை:

    காவிரி விவகாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மே 19-ம் தேதி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த், திருமாவளவன், தமிழிசை உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரம் தொடர்பாக மே 19இல் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ரஜினியையும் அழைக்க உள்ளேன். ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்பதே ஆலோசனை கூட்டத்தின் பெயர். என கூறினார்.

    கமல்ஹாசனின் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மு.க ஸ்டாலின் அதன்பின்னர் தெரிவித்தார். #MKStalin #KamalHaasan
    ×